ஹூஸ்டன்: அமெரிக்கா சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அமெரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி நேற்றிரவு ஹூஸ்டன் பிரையேர் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த அமெரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மோனாங்க் படேல் 42, ஆரோன் ஜோன்ஸ் 35, ஸ்டீவன் டெய்லர் 31 ரன் எடுத்தனர். வங்கதேச பவுலிங்கில் முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணியில் சவுமியா சர்க்கார் டக்அவுட் ஆக தன்சித் ஹசன் 19, கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 36, ஷாகிப் அல்ஹசன் 30, டவ்ஹிட் ஹ்ரிடோய் 25 ரன் எடுத்தனர். 19.3 ஓவரில் 138 ரன்னுக்கு வங்கதேசம் ஆல்அவுட் ஆனது. இதனால் அமெரிக்கா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் 2-0 என தொடரையும் கைப்பற்றியது. 3 விக்ெகட் எடுத்த அலிகான் ஆட்டநாயகன் விருது பெற்றார். 3வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது. உலக கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் கத்துக்குட்டி அமெரிக்காவிடம் வங்கதேசம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post வங்கதேசத்தை மீண்டும் வீழ்த்திய அமெரிக்கா: 2-0 என தொடரையும் கைப்பற்றி அசத்தல் appeared first on Dinakaran.