திருச்செந்தூர், மே 24:திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியின் 2022-2023ம் ஆண்டுக்கான லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி தொகை ரூ.1,01,651 மற்றும் கல்வி நிதிக்கான தொகை ரூ.67,768 ஆக மொத்தம் ரூ.1,69,419க்கான காசோலையினை வங்கியின் துணைப்பதிவாளர்/செயலாட்சியர் சீனிவாசன், தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர்/செயலாட்சியர் சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் சாம் டேனியல் ராஜிடம் வழங்கினார். வங்கியின் பொதுமேலாளர் (பொறுப்பு) மாரியப்பன் உடனிருந்தார்.
The post திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கி வளர்ச்சி,கல்வி நிதி வழங்கல் appeared first on Dinakaran.