- மாணவர்
- ஷிரினகிருஷ்டி
- கடகா விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரி
- முதல்வர்
- எம். யூ கே. ஸ்டாலின்
- சென்னை
- முதலமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- கே. ஸ்டாலின்
- புதுக்கோட்டை மாவட்டம்
- தெக்கத்தூர்
- ஸ்ரீ
- இலங்கை
- தமிழர் மறுவாழ்வு
- வீட்டில்
- ஷரினகிருஷ்மன்
- விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரி
- சேர்க்கை
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.5.2024) முகாம் அலுவலகத்தில், புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி செல்வி சு. ஷரினாகிறிஸ்ட்-க்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பு படித்திட உதவி செய்து, அக்கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை வழங்கினார். மேலும், அம்மாணவிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய திருக்குறள் உரை நூல் மற்றும் பேனாவையும் பரிசாக வழங்கி, வாழ்த்தினார். தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் திரு. சுசந்த அஜித்குமார் – திருமதி மரியகிறிஸ்டின் தம்பதியரின் மகள்கள் செல்வி ஷரினாகிறிஸ்ட் மற்றும் செல்வி மெனிஷாகிறிஸ்ட் ஆகியோர் கைப்பேசி வாங்குவதற்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்கள்.
அவர்களின் இச்செயலை பாராட்டி, கல்விக்கு பயன்படும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கையடக்க கணினிகளை (TAB) வழங்கி வாழ்த்தினார்கள். செல்வி சு. ஷரினாகிறிஸ்ட் அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவத் துறையோடு தொடர்புடைய Para Medical பிரிவில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பு படித்திட உதவிடுமாறு அம்மாணவியின் தாயார் மரியகிறிஸ்டின், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலம் கோரியிருந்தார். அதனை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர், மாணவி சு. ஷரினாகிறிஸ்ட்-க்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பு படித்திட சேர்க்கை ஆணையினை வழங்கினார்.
The post மாணவி ஷரினாகிறிஸ்டுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.