×

புகழிமலை பாலசுப்பிரமணியசாமி கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம், மே 23: கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாலசுப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் ,விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர் . கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவில் , நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post புகழிமலை பாலசுப்பிரமணியசாமி கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Vaikasi ,Pugazhimalai ,Balasubramaniasamy Temple ,Velayuthampalayam ,Balasubramaniaswamy ,Visakha ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு