×

சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மல்லசமுத்திரம், மே 21: மல்லசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற சோழீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக நந்தி பகவானுக்கு பால், இளநீர், பன்னீர், தயிர், கரும்புச்சாறு மற்றும் பல்வேறு திரவிய அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் -ஆராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது, கன மழை பெய்ததால் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

The post சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Choeeswarar temple ,Mallasamudra ,Lord ,Nandi ,
× RELATED மாதவன் போற்றும் மச்சபுரி