×

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

சென்னை: காவிரி உரிமையை சட்டரீதியாக மட்டுமல்ல, அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கள்ள மவுனம் எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை என்று அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். காவிரி மட்டுமல்ல பல்வேறு அரசியல் பிரச்சனைகளில் எடப்பாடி பழனிசாமியின் கள்ள மவுனத்தை மக்கள். பார்த்திருக்கிறார்கள். காவிரி இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி. நீரை தாரை வார்த்தது எடப்பாடிதான். காவிரி விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பை தமிழ்நாடு அரசு பதிவு செய்து வந்ததுதான் உண்மை. காவிரி வடிநிலத்தில் கேரளா, கர்நாடகா மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களை சேகரிக்க ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி தீர்ப்பை மீறும் விதமாக கேரளாவோ, கர்நாடகாவோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்ப்போம் என்று கூறினார்.

The post காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Duraimurugan ,Edappadi Palaniswami ,Chennai ,Minister ,Kerala government ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...