- விருதுநகர்
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- தின மலர்
விருதுநகர், மே 20: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் சிரமமடைகின்றனர். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் நாய்கள் சுற்றித் திரிவதால் அங்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் அச்சத்துடன் விலகி செல்கின்றனர். பணியாளர்கள் நாய்களை துரத்தினாலும் மீண்டும் அவை மருத்துவமனைக்குள் வந்துவிடுகின்றன. இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்குள் சுற்றித் திரியும் நாய்களை நிரந்தரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
The post அரசு ஆஸ்பத்திரியில் சுற்றித்திரியும் நாய்கள் appeared first on Dinakaran.