×

விபத்தில் கால்முறிந்த வாலிபர் தற்கொலை

திருச்சுழி, மே 19: திருச்சுழி அருகே உள்ள கேத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவர் தூத்துக்குடி தனியார் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கொல்காத்தாவிற்கு லோடு ஏற்றிச் சென்றார். லோடு இறக்குமிடத்தில் மூட்டைகள் சரிந்து கோவிந்தராஜ் மீது விழுந்தது. இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. பின்னர் சொந்த ஊருக்கு வந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கால் முறிவு வேதனை காரணமாக விரக்தியடைந்த அவர் வீட்டில் வைத்திருந்த சானி பவுடரை குடித்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்சுழி போலிசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post விபத்தில் கால்முறிந்த வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Govindaraj ,Kethanayakkanpatti ,Tuticorin ,Kolkata ,
× RELATED திருச்சுழி அரசு மருத்துவமனையில்...