சாத்தூர், மே 19: சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் சுற்றி வரும் வெளி பிரகாரத்தில் உள்ள தூண்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலைச் சுற்றி நான்கு புறமும் பக்தர்கள் சுற்றிவரும் மண்டபம் உள்ளது. அதில் உள்ள தூண்கள் வேலைப்பாடுகள் இன்றி அமைக்கப்பட்டிருந்தது. இந்த தூண்களில் வேலைப்பாடுகள் செய்து அழகுபடுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ரூ.3 கோடி மதிப்பில் தூண்களை அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது மண்டப தூண்களில் சிற்பங்கள் மற்றும் வேலைப்பாடுகள் அமைத்து அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
The post இருக்கன்குடி கோயில் தூண்களை ₹3 கோடியில் அழகுபடுத்தும் பணி appeared first on Dinakaran.