×

கத்தியை காட்டி வழிப்பறி பாஜ நிர்வாகி கைது: கொலை வழக்குகளில் தொடர்புடையவர்

பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் வாலிபர் ஒருவர் அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர்களை மடக்கி கத்தியை காட்டி பணம் பறிப்பதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (37) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் பள்ளிகொண்டா கட்டுப்புடி தெருவை சேர்ந்த கிளி (எ) சதீஷ் (37) என்பது தெரியவந்தது. இவர் வேலூர் மாவட்ட பாஜ இளைஞரணி மாவட்ட தலைவராக இருப்பதும், அரக்கோணம், வேலூரில் நடந்த முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சதீஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post கத்தியை காட்டி வழிப்பறி பாஜ நிர்வாகி கைது: கொலை வழக்குகளில் தொடர்புடையவர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Pallikonda ,Kandaneri National Highway ,Pallikonda, Vellore district ,Dinakaran ,
× RELATED கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில்...