×

3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

பேராவூரணி: எல்லை தாண்டி சென்றதாக தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழுமங்குடவை சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் மீனவர்கள் வாஞ்சிநாதன் (22), மகேஷ் (30), ரஞ்சித் (32) ஆகிய 3 பேரும் நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கடலில் திடீர் மழை மற்றும் காற்று வீசியதால் நாட்டுப்படகு திசை தெரியாமல் இலங்கை எல்லைக்கு சென்றது. இதனையடுத்து எல்லை தாண்டி வந்ததாக படகுகடன் மீனவர்கள் மூன்று பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் மாவட்டம் இளவாழை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து 3 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் 3 பேரையும் வரும் 29ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post 3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri ,Navy ,Sri Lankan Navy ,Tamil Nadu ,Vanchinathan ,Mahesh ,Ranjith ,Muneeswaran ,Kagamanguda ,Sethubavasthram, Thanjavur district ,
× RELATED அயலகத் தமிழர் நலன் மற்றும்...