×

கபர்ஸ்தான் நில ஒதுக்கீடு: ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கபர்ஸ்தான் நில ஒதுக்கீட்டில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு நிலத்தில் கபர்ஸ்தான் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. மயானத்துக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்றும், வழக்கு தொடர்பாக நில நிர்வாக ஆணையர், புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post கபர்ஸ்தான் நில ஒதுக்கீடு: ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Kabarstan ,High Court Madurai Branch ,Pudukottai ,Madurai ,High Court ,Ponnamaravathi ,Dinakaran ,
× RELATED கிறிஸ்தவ தேவாலய சொத்துக்களை...