×

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கூடுதலாக 5 மலர் சிற்பம் அமைக்கும் பணி தீவிரம்..!!

உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 32,000 மலர்களை கொண்டு கூடுதலாக 5 மலர் சிற்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலா 6,000 மலர்களை கொண்டு கிட்டார், காளான், படகு, பாராசூட், மலர் கொத்து ஆகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. உதகையில் 126-வது மலர் கண்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கியது. மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 1.2 லட்சம் மலர்களால் ஆன டிஸ்னி வேல்டு உருவம் வடிவமைக்கப்பட உள்ளது. 80,000 மலர்களால் ஆன உதகை மலை ரயில் உருவமும் ஏற்கனவே வடிவமைத்து காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

The post உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கூடுதலாக 5 மலர் சிற்பம் அமைக்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : State Botanical Garden of Uthkai ,State Botanical Garden of ,Udaipur ,State Botanical Garden ,Dinakaran ,
× RELATED உதகையில் 126-வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்குகிறது!