×

நீடாமங்கலம், கோட்டூர் அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பம் வரவேற்பு

திருவாரூர், மே 16: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு மாணவர்கள் அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் (பொ) சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளதால் மாணவ, மாணவிகள் தங்களது சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் (ஜுன்) 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு விண்ணப்பதை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தினை இணையதள வசதி உள்ள மையங்களில் இருந்தும், அரசு இ-சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து அரசு தொழிற் பயிற்சி நிலையத்திலிருந்தும் சமர்ப்பிக்கலாம். மேலும் இணையதளத்தில் கொடுத்துள்ள உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், காலணி மற்றும் பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல், கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும். இணையதள கலந்தாய்வில் கலந்துகொண்டு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவை தெரிவு செய்து கொள்ளலாம். மேலும் இதுதொடர்பான விரிவான விவரங்களுக்கு 9865072426, 9047643393, 9677394290, 9499055742 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் (பொ) சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

The post நீடாமங்கலம், கோட்டூர் அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Kotur Govt ITI ,Tiruvarur ,Collector ( ,P) Sanmuganathan ,Government Vocational Training Center ,Kotur ,Tiruvarur district ,Kotur Government ITI ,Dinakaran ,
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி