×

22 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பொன்னேரி, மே 16: பொன்னேரி அருகே 22 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்னேரி அடுத்த மெதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2002ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 22 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஜெயம்மாள், நேசலதா, நடராஜன் மற்றும் தனியார் நிறுவனம், சுயதொழில், வெளிநாடு என பல்வேறு பணிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற வகுப்பறைகளை சுற்றிப் பார்த்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அழைத்து, அவர்களை கவுரவித்து அவர்களுடனான நினைவுகளையும் நிகழ்வில் நினைவு கூர்ந்தனர். தங்களது பள்ளி கால நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் அவர்களை ஆரத்தழுவி செல்பி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் தாங்கள் படித்த பள்ளிக்கு கல்வி உபகரணங்களை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

The post 22 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Government School Alumni ,Ponneri ,Methur ,Dinakaran ,
× RELATED பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட...