×

திருவழுதிநாடார்விளை நம்மாழ்வார் சுவாமி கோயிலில் குருபூஜை விழா துவக்கம்

ஏரல், மே 16: திருவழுதிநாடார்விளை நம்மாழ்வார் சுவாமி கோயில் 10 நாள் குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. ஏரல் அருகேயுள்ள திருவழுதிநாடார்விளை நம்மாழ்வார் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி 1ல் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் குருபூஜை விழா நடைபெறும். இதில் திருவழுதிநாடார்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாகப் பங்கேற்பது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான குருபூஜை விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி அதிகாலை சங்குமுக தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இதையடுத்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு குருபூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post திருவழுதிநாடார்விளை நம்மாழ்வார் சுவாமி கோயிலில் குருபூஜை விழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Gurupuja ,Nammalwar Swamy Temple ,Tiruvathinadarvilai ,Eral ,Gurupuja festival of Thiruvathinadarvilai Nammalwar Swamy ,Temple ,Gurupuja festival ,Vaikasi 1 ,Thiruvathinadarvilai Nammalwar Swami Temple ,Arel.… ,Thiruvaluthinadarvilai Nammalwar Swami Temple ,
× RELATED பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலி்ல் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா