×

பழநி நகராட்சி மக்கள் கவனத்திற்கு

பழநி, மே 16: பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என பழநி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பழநி நகரில் ஏராளமான அளவில் திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள், சத்திரங்கள், ஹோட்டல்கள் ஆகியவை உள்ளன. இவற்றில் இருந்து தினமும் ஏராளமான குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுகின்றன. இதனால் நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அதற்கு பதிலாக குப்பைகளை சேமித்து நகராட்சி வாகனங்கள் வரும் போது ஒப்படைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை முறையாக பின்பற்றப்படுவதில்லை. எனவே, இனி பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ெகாடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி நாளை துவங்கவுள்ளது. நேற்று பூங்காவில் மலர் கண்காட்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளை கலெக்டர் பூங்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post பழநி நகராட்சி மக்கள் கவனத்திற்கு appeared first on Dinakaran.

Tags : Palani Municipality ,Palani ,Palani municipal administration ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து