×

தாயை கழுத்தறுத்து கொன்று மகன் தற்கொலை முயற்சி

ஈரோடு: வெள்ளோடு அருகே வயதான தாயை கழுத்து அறுத்து கொலை செய்து, மகன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே தச்சங்கரை வழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுசிலா (70). கணவர் இறந்துவிட்டார். 2 மகன்கள். இதில் மூத்த மகன் விஜயகுமார் (42), திருமணமாகாதவர். மதுப்பழக்கம் இருப்பதால் தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், விஜயகுமார் நேற்று மதுபோதையில் வீட்டிற்கு வந்து, சுசிலாவிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சுசிலா விழுந்தார். பின்னர், விஜயகுமாரும் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சுசிலா இறந்தார். விஜயகுமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post தாயை கழுத்தறுத்து கொன்று மகன் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Erode ,Vellod ,Susila ,Dachangarai Path ,Erode district ,
× RELATED தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த மூதாட்டி சாவு