×

3 வயது சிறுவனை குதறிய தெரு நாய்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மனைவி தமிழரசி. செங்கல் அறுக்கும் வேலை செய்கின்றனர். தம்பதியர் நேற்று காலை வேலைக்கு செல்லும்போது, 3வயது மகன் தருணை அழைத்து சென்றனர். அங்கு தருண் விளையாடி கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தெருநாய் திடீரென்று அவனை கடித்து குதறியது. சிறுவனது அலறல் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தெருநாயை விரட்டி அடித்தனர். நாய் கடித்ததில் தருணுக்கு வயிறு, முதுகுப்பகுதி முழுவதும் காயம் ஏற்பட்டது. பெற்றோர் உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post 3 வயது சிறுவனை குதறிய தெரு நாய் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Gnanasekaran ,Neppathur island ,Mayiladuthurai district ,Tamilarasi ,Tarun ,
× RELATED சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது