×

நாகப்பட்டினம் மாவட்டம் பிளஸ் 1 தேர்வில் 91 சதவீதம் தேர்ச்சி

நாகப்பட்டினம்,மே15: நாகப்பட்டினம் மாவட்டம் பிளஸ்-1 தேர்வில் 91 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 127 மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 734 பேர் தேர்ச்சி பெற்றனர். 87 சதவீதம் தேர்ச்சி ஆகும். அதே போல் 3 ஆயிரத்து 593 மாணவிகள் தேர்வு எழுதியதில் 3 ஆயிரத்து 387 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94 சதவீதம் தேர்ச்சி ஆகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 71 பள்ளிகளில் இருந்து 6 ஆயிரத்து 720 பேர் தேர்வு எழுதியதில் 6 ஆயிரத்து 121 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு 85.03 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டை விட 6 சதவீதம் கூடுதல் தேர்ச்சி அடைந்து மாநில அளவில் 20வது இடத்தை நாகப்பட்டினம் மாவட்டம் பெற்றுள்ளது.

44 அரசுப்பள்ளிகள் தேர்வு எழுதியதில் 7 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. வேதாரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கத்தரிபுலம் அரசு மேல்நிலைப் பள்ளி, புஷ்பவனம் அரசு மேல்நிலைப் பள்ளி, தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளி, தேத்தாக்குடி தெற்கு எம்கே அரசு மேல்நிலைப் பள்ளி, கருப்பம்புலம் பிவிதேவர் அரசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.அதே போல் 14 மெட்ரிக் பள்ளிகளில் 10 பள்ளிகளும், 2 பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 8 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 சிறப்பு பள்ளி, 2 சுயநிதிபள்ளிகள் ஆகியவை 100 சதவீதம் கூட தேர்ச்சி பெறவில்லை.

The post நாகப்பட்டினம் மாவட்டம் பிளஸ் 1 தேர்வில் 91 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Higher Secondary ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை