×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

காரைக்குடி, மே 15: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் 2 பொதுதேர்வில் அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவர் ராகவகிருஷ்ணா 500க்கு 483 மார்க் பெற்று 96.6 சதவீதத்தில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். ஹர்ஷத்மாறன், மெய்யப்பன் ஆகியோர் 500க்கு 469 மார்க் பெற்றுள்ளனர். ப்ரீத்தி கண்ணன் 500க்கு 468 மார்க் பெற்றுள்ளார். ஹெல்த்கேர் பாடத்தில் ஒருவர் 100க்கு 100 மார்க் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிகுழும தலைவர் எஸ்பி.குமரேசன், துணைத்தலைவர் அருண், நிர்வாக இயக்குநர்கள் சாந்திகுமரேசன், பிரித்தி அருண், பள்ளி முதல்வர் ஊஷாகுமாரி, துணை முதல்வர் பிரேம சித்ரா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சிறப்பிடம் appeared first on Dinakaran.

Tags : Plus ,Setinad ,Public School ,Karaikudi ,Chettinadu Public CBSE School ,Plus 2 General Election ,Raghavakrishna ,Setinadu Public School Special ,Dinakaran ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்