×

பீகார் வாலிபர்களை தாக்கிய கேரள வாலிபர்கள் கைது

விருதுநகர், மே 15: பீகார் வாலிபர்களை தாக்கிய கேரள வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் சிமிண்ட் பேக்டரியில் பீகார் மாநிலம் பெல்பாரியை சேர்ந்த சகோதரர்கள் அப்துல்ரஹ்மான்(29), சோன்வார்(39) வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு பின்பகுதியில் கேரளாவை சேர்ந்த சபிக்(37), சிகாப்(32), ரியாஷ்(36) உள்ளிட்டோர் தங்கி மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

அப்துல்ரஹ்மான் தங்கியுள்ள இடத்தின் அருகில் உள்ள குளியல் தொட்டியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கிருந்த கேரள வாலிபர்கள் குளியல் தொட்டியில் வாளியால் தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்துள்ளனர். இதை அப்துல்ரஹ்மான் எதற்கு தொட்டியில் வாளியை விட்டு எடுக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு கேரள வாலிபர்கள் அவதூறாக திட்டி, அப்துல்ரஹ்மான் மற்றும் சோன்வாரை கம்பால் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வச்சக்காரப்பட்டி போலீசில் அப்துல்ரஹ்மான் அளித்த புகாரில் சபிக், சிகாப், ரியாஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பீகார் வாலிபர்களை தாக்கிய கேரள வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Abdul Rahman ,Sonwar ,Belbari ,Bihar ,RR Nagar Cement Factory ,Dinakaran ,
× RELATED கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை...