×

பசுமை முதன்மையாளர் விருது தேர்வு கூட்டம்

விருதுநகர், மே 15: தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை மேற்கொண்ட தனிநபர்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றோருக்கு ஆண்டுதோறும் 100 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்க 2021ல் அரசாணை வெளியிடப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் 3 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. விருதுநகர் மாவட்டத்தில் 2023-24க்கான பசுமை முதன்மையாளர் விருதிற்கு விண்ணப்பிக்க கடந்த 29.12.2023ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விருது பெற 10 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களில் இருந்து பசுமை முதன்மையாளர் விருதிற்கு 3 நபர்களை தேர்வு செய்ய கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட விருது தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 3 நபர்களை தேர்வு செய்து அரசிற்கு அனுப்பினர்.

The post பசுமை முதன்மையாளர் விருது தேர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Principal Award ,Virudhunagar ,Tamil Nadu ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் மக்களை தேடி...