×

சாலை விபத்தில் ஒடிசா வாலிபர் பலி

ஓட்டப்பிடாரம், மே 15: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபிதாரா ராகுலின் மகன் நிரஞ்சன் (36). தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையில் செயல்படும் தனியார் கம்பெனியில் மெஷின் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்த இவர், இதற்காக அருகேயுள்ள வீரபாண்டி நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலை முடிந்த பிறகு வீடு செல்ல சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நிரஞ்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்துவந்த ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலை விபத்தில் ஒடிசா வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Ottapidaram ,Niranjan ,Rabithara Rahul ,Odisha ,Crossroads ,Thoothukudi district ,Veerapandi ,Dinakaran ,
× RELATED கலெக்டராக தேர்வான தூத்துக்குடி...