×

குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை

தேன்கனிக்கோட்டை, மே 15: தேன்கனிக்கோட்டை அடுத்த தொலுவபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா(32) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா(25). இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் மல்லிகா விரத்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிவண்ணா வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் வந்த போது, வீட்டில் மல்லிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், மல்லிகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Sivanna ,Tholuvapetta village ,Mallika ,Vratti ,
× RELATED பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்