×

நிதி நிறுவனங்களில் போலி நகை அடகு வைத்து மோசடி மேலும் இருவர் ைகது

நித்திரவிளை, மே 15: கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் கடந்த பிப்ரவரி மாதம் போலி நகையை அடகு வைத்து பணம் மோசடியில் ஈடுபட்டதாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து களியக்காவிளை அருகே கோழிவிளை பகுதியை சேர்ந்த லால் கிங்சிலி (35), என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் படி கேரள மாநிலம் பூந்துறை பகுதியை ேசர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் பூந்துறை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அல்அமீன் (36) என்பவரை கடந்த மார்ச் மாதம் தனிப்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் மேலும் 2 பெண்கள் உட்பட 4 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பூந்துறை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்த அயூப் (54), பள்ளிமுக்கு பகுதியை சேர்ந்த ஷானவாஸ் (34) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post நிதி நிறுவனங்களில் போலி நகை அடகு வைத்து மோசடி மேலும் இருவர் ைகது appeared first on Dinakaran.

Tags : Nithravilai ,Kollangode police ,Kollangode ,Kozhivilai ,Kalikakavilai ,
× RELATED காட்டுப்பன்றிகளுக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி பெண் சிறுத்தை பலி