×

விற்பனை மையத்தில் பொருட்கள் மாயம்

மதுரை, மே 15: மதுரை நாகனாகுளம் புதுநத்தம் ரோட்டில் ஒரு விற்பனை மையம் உள்ளது. இங்கு பொருட்கள் வாங்க தம்பதியினர் வந்தனர். கணவர், மனைவி இருவரும் விற்பனை மையத்தில் இருந்த மிக்ஸி, காமாட்சிவிளக்கு, வாட்ச்சுகள், தட்டுகள், ஸ்பிரே ஆகியவற்றை எடுத்து வைத்தனர். ஆனால் பில்போட்டு பணம் செலுத்தாமல் அந்த பொருட்களை தம்பதியினர் எடுத்துச் சென்றதாக உரிமையாளர் சந்தோஷ் தீபக் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமரா மூலம் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில், மதுரை புதூரைச் சேர்ந்த சூர்யாபாண்டி(27), சவுமியா(25) எனத்தெரிந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post விற்பனை மையத்தில் பொருட்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : MADURAI ,NAGANAKULAM ,BUVINATHAM ,ROAD ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...