×

சட்டீஸ்கரில் 30 நக்சல்கள் சரண்

பிஜாப்பூர்: நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று சட்டீஸ்கர். நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒருபகுதியாக கடந்த இரு மாதங்களில் ஏராளமான நக்சல்கள் காவல்துறை என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் பல நக்சல்கள் சரணடைவதும் தொடர்கிறது.

அந்த வகையில் சட்டீஸ்கரில் நேற்று 6 பெண்கள் உள்பட 30 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 9 பேரை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.39 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சரணடைந்த 30 நக்சல்களுக்கும் தலா ரூ.25,000 வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் அரசின் கொள்கைப்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சட்டீஸ்கரில் 30 நக்சல்கள் சரண் appeared first on Dinakaran.

Tags : naxals ,Chhattisgarh ,Bijapur ,Naxal ,Dinakaran ,
× RELATED 7 நக்சல்கள் சுட்டுக்கொலை