×

வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பூஜைகள் இன்று தொடங்குகின்றன. இதை முன்னிட்டு கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் வரும் 19ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். வரும் 19ம் தேதி பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

The post வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Vaikasi Month Puja Opening ,Sabarimala Temple Walk ,Thiruvananthapuram ,Sabarimala ,Ayyappan temple walk ,Vaikasi month ,Sabarimala Ayyappan temple ,Sabarimala temple ,
× RELATED சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு