×

மின்னல் தாக்கி ரயில்வே போலீஸ், பெண் பரிதாப சாவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே நவலையைச் சேர்ந்தவர் முனியப்பன்(43). இவர் திருப்பத்தூரில் ரயில்வே போலீசாக பணியாற்றி வந்தார். இவர், சொந்த ஊரான நவலையில் வீடு கட்டி வந்தார். முதல் தளத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று மாலை, அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. மழையில் நனைந்து விடாமல் இருக்க கட்டுமானத்தின் மீது சாக்குப்பை போர்த்துவதற்காக சென்றபோது, திடீரென மின்னல் தாக்கியதில், முனியப்பன் உடல் கருகி மயங்கி விழுந்தார். உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதே போல், மொரப்பூர் அருகே எலவடை நைனாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோகரன் மனைவி சித்ரா(50), நேற்று மாலை, தொழுவத்தில் கட்டியிருந்த பசு மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

The post மின்னல் தாக்கி ரயில்வே போலீஸ், பெண் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Railway police ,Muniyappan ,Navalai ,Morapur ,Dharmapuri district ,Tiruppathur ,Navala ,Dinakaran ,
× RELATED ரயில்கள் மீது கல்லெறிந்தால் கடும்...