×

கூவத்தூரில் கள்ளு குடித்து விட்டு வந்தபோது விபரீதம் மரத்தின் மீது கார் மோதி 3 பேர் பலி: சென்னையை சேர்ந்தவர்கள்; 2 பேர் கவலைக்கிடம்

சென்னை: கல்பாக்கம் அருகே இசிஆர் சாலையில் கள்ளு குடித்து விட்டு கார் ஓட்டியபோது மரத்தின் மீது மோதியதில் சென்னையை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கூவத்தூரிலிந்து ஒரே காரில் 5 பேர் சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த ஒரு மரத்தின் மீது கார் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதை பார்த்த மக்கள் ஓடி வந்து காரிலிருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களை வெளியில் மீட்க முடியவில்லை. இதையடுத்து வெல்டிங் கடை வைத்திருப்பவர்களின் உதவியுடன் காரை வெல்டிங் மிஷன் மூலம் வெட்டி எடுத்து காரில் சிக்கியவர்களை மக்கள் மீட்டனர். இதில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து தெரியவந்தது. கவலைக்கிடமான நிலையில் இருந்த 2 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த சதுரங்கப்பட்டினம் போலீசார், விபத்தில் இறந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், 5 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இறந்தவர்கள் ராஜேஷ் 25, ஏழுமலை 26, விக்கி 25 என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் குட்டி பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் கூவத்தூரில் கள்ளு குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் காரை ஓட்டி வந்தபோது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post கூவத்தூரில் கள்ளு குடித்து விட்டு வந்தபோது விபரீதம் மரத்தின் மீது கார் மோதி 3 பேர் பலி: சென்னையை சேர்ந்தவர்கள்; 2 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Couvatur ,Chennai ,ECR ,Kalpakkam ,Couvadoor ,Coovadoor ,
× RELATED ண்டும், குழியுமாக காட்சியளித்த குலசை இசிஆர் சாலை சீரமைப்பு