×

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்


ஆந்திரா: ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை பார்வையிடச் சென்ற போது காரை வழிமறித்து தாக்கினர். சந்திரகிரி தொகுதி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவி வருகிறது. தெலுங்கு தேசம் வேட்பாளரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

The post ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Telugu Desam Party ,Andhra Pradesh ,Pulivarthi Nani ,Tirupati, Andhra Pradesh ,Chandragiri ,Dinakaran ,
× RELATED தெலுங்கு தேசம் கட்சி – ஒய்.எஸ்.ஆர்...