×

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்கள்: பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்ளே வெளியேறினர்

டெல்லி: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த வீர்கள் சிலர் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். ராஜஸ்தான் அணிக்காக 2 சதங்கள் அடித்து அசத்திய தொடக்க வீரர் பட்லர் அணியிலிருந்து விலகி தாயகம் திரும்பினார். பிளே ஆஃப் க்கு கடுமையாக போராடிவரும் பெங்களூரு அணியிலிருந்து அதிரடி வீரர் வில் ஜேக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்ளே வெளியேறியது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

காயத்தால் அவதிப்படும் பஞ்சாப் அணி வீரர் லிவிங்ஸ்டன் உலக கோப்பைக்கு தயாராகும் நோக்கில் ஏற்கனவே இங்கிலாந்து சென்று விட்டார். பில் சால்ட், மொயின் அலி, சாம்கரண், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரும் விரைவில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் அணியுடன் வரும் 22ம் தேதி தொடங்கும் 20 ஓவர் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

The post ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்கள்: பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்ளே வெளியேறினர் appeared first on Dinakaran.

Tags : England ,IPL ,Bengaluru ,Will Jacks ,Reece Tapley ,Delhi ,Buttler ,Rajasthan ,Will Jakes ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் கிங்சுக்கு ஜிதேஷ் கேப்டன்