×

வெளுத்துக்கட்டும் கோடை மழை… கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, தூத்துக்குடியில் கனமழை!!

டெல்லி : கேரளாவில் கோடை மழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் ஒரு சில இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழைப்பதிவு!!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டி, பொள்ளாச்சி, தூத்துக்குடியில் நேற்று கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பொள்ளாச்சி, தூத்துக்குடியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் ஆழியார், ஸ்ரீவில்லிபுத்தூர், நத்தம், வீரபாண்டி, நீலகிரி பார்வுட் எஸ்டேட்டில் தலா 6 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. குமரி மாவட்டம் கலியல், மைலாடி, கோவை மாவட்டம் சின்கோனாவில் தலா 5 செ.மீ. மழைப் பொழிந்துள்ளது. திற்பரப்பு. கோழிப்போர்விளை உள்ளிட்ட 12 இடங்களில் தலா 4 செ.மீ. மழையும், ஆனைக்கிடங்கு, எலந்தகுட்டை மேடு, சந்தியூர், மூலனூர் உள்ளிட்ட 17 இடங்களில் தலா 3 செ.மீ. மழையும் [பெய்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் 2 செ.மீ. மழை, 100க்கும் மேற்பட்ட இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post வெளுத்துக்கட்டும் கோடை மழை… கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, தூத்துக்குடியில் கனமழை!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Pollachi, Thoothukudi ,Tamil Nadu ,Delhi ,Thiruvananthapuram ,Pathanamthitta ,Ernakulam ,Idukki ,Thrissur ,Palakkad ,Puducherry ,Karaikal ,Pollachi ,Thoothukudi ,
× RELATED சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை...