×

சென்னையில் குற்றச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை கண்டறிய காவல் நிலையங்களுக்கு புதிய வகை கேமராக்கள்

சென்னை: சென்னையில் குற்றச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், மீண்டும் பயன்படுத்தும்போது அதைக் கண்டறிய காவல் நிலையங்களுக்கு புதிய வகை கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளன. குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் சென்றால் காவல் அதிகாரியின் செல்போனுக்கு தகவல் அனுப்பும் வகையில் கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை பகுதியில் சோதனை முறையில் புதிய வகை கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் அனைத்து காவல்நிலையங்களுக்கும் புதிய கேமராக்கள் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் குற்றச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை கண்டறிய காவல் நிலையங்களுக்கு புதிய வகை கேமராக்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vannarappat ,Dinakaran ,
× RELATED ஊழியரை கொடுமை செய்த கடை உரிமையாளர் கைது..!!