×

குளச்சலில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

குளச்சல்,மே 14 : குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர அ.தி.மு.க. அலுவலகத்தில் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன்,நகர முன்னாள் செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர மகளிர் அணி செயலாளர் சுப சந்தியா வரவேற்று பேசினார் .நகர இணை செயலாளர் செர்பா தீர்மானங்கள் வாசித்தார்.நகர முன்னாள் செயலாளர் பஷீர்கோயா, முன்னாள் கவுன்சிலர்கள் சூசை மரியான்,பெலிக்ஸ் ராஜன்,மரிய விக்டர்,பென்சிகர்,வக்கீல் சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், குளச்சல் நகர பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களை கடித்து குதறிய சம்பவங்களும் நடந்துள்ளது. எனவே இந்த நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. கடந்த 2004 சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்டு குளச்சல் லியோன் நகர்,குழந்தை யேசு காலனி,கொட்டில்பாடு கே.எஸ்.எஸ்.காலனி, காரித்தாஸ் காலனி மற்றும் ஆசாத் நகர் ஆகிய பகுதியில் 800 க்கும் மேற்பட்ட வீடுகளில் 19 வருடமாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கராத்தேயில் 7 வது பிளாக் பெல்ட் பெற்ற மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷனுக்கு பாராட்டு தெரிவிப்பது, குளச்சலில் தங்கு தடையின்றி மின் விநியோகம் செய்ய கேட்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர மகளிர் அணி இணை செயலாளர் அம்பிகா நன்றி கூறினார்.

The post குளச்சலில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,A.D.M.K. ,ADMK ,Andros ,Arumukaraja ,Ravindra Varshan, ,
× RELATED குளச்சல் அருகே கொட்டும் மழையில் சிறுமியிடம் செயின் பறிப்பு