×

அன்னவாசல் அருகே சூதாடிய 3 பேர் கைது

விராலிமலை, மே 14: அன்னவாசல் அருகே காசு வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரொக்கம், சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்தனர்.
அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் நாடக மேடை அருகே சிலர் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அன்னவாசல் போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அன்னவாசல் எஸ்ஐ சத்தியாதேவி தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு உள்ள நாடக மேடை அருகே பொதுவெளியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன்(33), முத்தையா(42), பழனி(47) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டு கட்டு மற்றும் ரொக்கம் 50ஐ பறிமுதல் செய்தனர்.

The post அன்னவாசல் அருகே சூதாடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Annavasal ,Viralimalai ,
× RELATED விராலிமலையில் 10 செ.மீ. மழை பதிவு