ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி. ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பின்னர் அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு முழுவதும் நான் காயத்தில் இருந்தேன்.
அது முதல் சிஎஸ்கே நிர்வாகம், பிசியோதெரபிஸ்ட் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் என அனைவரும் என்னை சிறப்பாக பார்த்துக் கொண்டானர். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த போட்டியில் பிட்ச் எவ்வாறு இருந்தது என்பதை நாம் பார்த்தோம். எனவே, கேப்டனுடன் ஆலோசித்தேன். அப்போது விக்கெட்டுக்குள் பந்து வீச வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம்” என்றார்.
The post சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நன்றி; ஆட்டநாயகன் சிமர்ஜீத் சிங் மகிழ்ச்சி appeared first on Dinakaran.