×

சென்னை தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

சென்னை: சென்னை தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். எம்பிஏ படித்து கொண்டே ஆட்டோ ஒட்டி வந்த உதயகுமாரை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அருகே இருக்க கூடிய சிட்லபாக்கத்தில் உதயகுமார் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து கொண்டே பகுதி நேரத்தில் ஆட்டோ ஒட்டி வந்தார். சிட்லபாக்கத்தில் பெண் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிடிருந்த பொது 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். 3 பேரிடம் இருந்த ஆயுதத்தால் சரமாரியாக ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளனர்.

பலத்த காயமடைந்த உதயகுமார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் என தெரியவந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன் உதயகுமார் ஆட்டோவை சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால் முன்விரோதம் ஏற்பட்டு கொலை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சென்னை தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai ,Udayakumar ,Tambaram, Chennai ,
× RELATED தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!!