×

திருப்பத்தூரில் ஓட்டலுக்கு அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு அதிரடி கைது: சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஓட்டலுக்கு அழைத்து சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே சந்தவாசல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி(51). இவர், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

அதே அலுவலகத்தில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டரை பார்க்க அவரது உறவினரான நாட்றம்பள்ளியை சேர்ந்த திருமணமான 28 வயது பெண் அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது அவருக்கும், நாராயணசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், அந்த பெண்ணை போலீசில் சேரும்படி நாராயணசாமி அறிவுரை கூறியுள்ளார். இதற்காக அவரை திருப்பத்தூரில் உள்ள தனியார் போலீஸ் பயிற்சி வகுப்பில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நாராயணசாமியும், அந்த பெண்ணும் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு, நாராயணசாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஏட்டு நாராயணசாமியை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்பி ஆல்பர்ட்ஜான், ஏட்டு நாராயணசாமியை நேற்று சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவிட்டார்.

The post திருப்பத்தூரில் ஓட்டலுக்கு அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு அதிரடி கைது: சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Tirupattur ,Narayanasamy ,Chandavasal village ,Polur, Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை...