×

தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்!

தேனி: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். கடமலைக்குண்டு அருகே உள்ள ஆலந்தளிர் மற்றும் குமணன் தொழு கிராமத்தில் வெறி நாய் கடித்து காயம். காயமடைந்தவர்களுக்கு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடமலைக்குண்டு பகுதியில் கடந்த சில நாட்களாக வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதியினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

The post தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்! appeared first on Dinakaran.

Tags : Theni District ,Teni ,Teni district ,Alandlir ,Kumanan ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு..!!