×

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

ஓசூர், மே 12: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் பகுதியில், நல்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் பாகலூர் தேர்பேட்டை பகுதியைச் சேர்ந்த பவன்(22), தேன்கனிக்கோட்டை கொத்தப்பள்ளி தனபால் என்பதும், அவர்கள் கஞ்சா பதுக்கி விற்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.

The post கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Nallur police ,Bagalur ,Hosur, Krishnagiri district ,Therpet ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்: ஓசூரில் தொழிலாளி தற்கொலை