×

மோடியால் விமர்சனத்தை தாங்க முடியாது; மற்றவர்களுக்கு எதிராக எதையும் பேசுவார்: சரத் பவார் கடும் தாக்கு


பீட்: பிரதமர் மோடியால் விமர்சனத்தை தாங்க முடியாது என்றும் மற்றவர்களுக்கு எதிராக எதையும் பேசுவார் என சரத் பவார் குற்றம் சாட்டினார். மகாராஷ்டிராவில் பீட் நகரில் நேற்று நடந்த கட்சி பேரணியில் சரத் பவார் பேசுகையில்,‘‘மோடியால் விமர்சனங்களை பொறுத்து கொள்ள முடியாது. ஆனால் மற்றவர்களை விமர்சித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது முஸ்லிம்களை குறிவைத்து மோடி பகிரங்கமாக பேசி வருகிறார். பிரதமர் என்பது அனைத்து சாதி,மதங்களுக்கும் பொதுவானவர். அவருடைய பேச்சில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு தென்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்காக பாஜ அரசு எதையும் செய்யவில்லை. ஆட்சியில் இருக்கும் மோடி பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டும் காணாதது போல் உள்ளார்’’ என்றார்.

The post மோடியால் விமர்சனத்தை தாங்க முடியாது; மற்றவர்களுக்கு எதிராக எதையும் பேசுவார்: சரத் பவார் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Sharad Pawar ,PM Modi ,Beed Nagar ,Maharashtra ,Sarath Pawar ,
× RELATED வாக்காளர்களை பிரிப்பதற்கு பிரதமர் முயற்சி: சரத்பவார் விமர்சனம்