×

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு 16 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 16 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையிலான நாட்களில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள் ஜூன் 6 முதல் 4ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு மே 16 முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் எனவும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு ஜூலை 2 முதல் ஜூலை 8ஆம் தேதி வரை நடக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு 16 முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்