×

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

 

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (28). கறிக்கடை தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (26). கர்ப்பிணியான கவுசல்யா கடந்த 15ம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அன்றைய தினம் வயிறு வலி அதிகமாக இருந்ததால் மகப்பேறு மருத்துவரின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை என 3 குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகள் முறையே 1.5, 1.45, 1.55 கிலோவுடன் இருந்தன. குழந்தைகள் குறைமாத பிரசவத்தில் பிறந்ததால் பிறந்து மூச்சுத்திணறலுடன் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

The post ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Government Medical College Hospital ,Balpandi ,Tarapuram Road ,Kausalya ,Kaushalya ,
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது