×

வாகனம் மோதி வாலிபர் பலி

ஓசூர், மே 11: ஓசூர் அருகே மோரனப்பள்ளி- சாமனப்பள்ளி சாலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், அட்கோ போலீசார் வழக்குப்பதிந்து, உயிரிழந்த நபர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

The post வாகனம் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Hosur ,Moranapalli-Chamanapally road ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்: ஓசூரில் தொழிலாளி தற்கொலை