×

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரஜ்வல் மீது 3வது வழக்குப்பதிவு

பெங்களூரு: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீது மூன்றாவதாக ஒரு வழக்கை சிறப்பு புலனாய்வு படையினர் பதிவு செய்துள்ளனர். ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் பலாத்கார வீடியோக்கள் கசிந்ததை தொடர்ந்து அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இவ்வழக்கை விசாரிக்க மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு படையினர் அவரை கைது செய்ய ப்ளுகார்னர் நோட்டீஸ் அளித்துள்ளனர். இந்நிலையில் தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவின் வீட்டு பணிப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் பாலியல் வீடியோவில் இடம்பெற்றிருந்த பெண்ணின் மகன் தனது தாயை துன்புறுத்தி பலாத்காரம் செய்ததாகவும், கடத்தி சென்று மிரட்டுவதாகவும் புகார் அளித்தை தொடர்ந்து எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது மஜத பெண் நிர்வாகி துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் என்று அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது மூன்றாவதாக ஒரு பெண் மே 8ம் தேதி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அவர் மீது எஸ்ஐடி போலீசார் மூன்றாவது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரஜ்வல் மீது 3வது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Prajwal ,Bangalore ,Prajwal Revanna ,Hassan MP ,Prajwal Revna ,Dinakaran ,
× RELATED பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு...