×

சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

பிஜப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக்கொன்றனர். சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில்கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிடியா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து பாதுகாப்புப் படையினர் அங்கு முற்றுகையிட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை முதல்வர் விஷ்ணு தியோ சாய் உறுதிப்படுத்தினார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் நடந்த தனித்தனி என்கவுன்டர்களில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 103 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

The post சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Bijapur ,Naxalites ,Bidiya ,Kangalur ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் –...