டெல்லி: 10 ஆண்டுகளாக போலி வாக்குறுதிகள் அளித்து மக்களை பா.ஜ.க. தவறாக வழி நடத்தி வந்துள்ளது என அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.வுக்கு தக்க பாடம் புகட்டும். விவசாயிகள், இளைஞர்கள், நாட்டு மக்கள் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
The post போலி வாக்குறுதிகள் அளித்து மக்களை பா.ஜ.க. தவறாக வழி நடத்தி வந்துள்ளது: அகிலேஷ் யாதவ் appeared first on Dinakaran.