×

சேலம் தீவட்டிப்பட்டி திருவிழா கலவரம் தொடர்பான வழக்கில் ஜாமின் கோரியவர்கள் மனு இன்று விசாரணை..!!

சேலம்: சேலம் தீவட்டிப்பட்டி திருவிழா கலவரம் தொடர்பான வழக்கில் ஜாமின் கோரியவர்கள் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக நிர்வாகி விஜயன் உட்பட 13 பேர் முன்ஜாமீன் கோரியும், 30 பேர் ஜாமீன் கோரியும் மனு செய்திருந்தனர். அதிமுக நிர்வாகி விஜயன் உட்பட 13 பேர் முன்ஜாமீன் கோரியும், 30 பேர் ஜாமீன் கோரியும் மனு செய்திருந்தனர். தீவட்டிப்பட்டி அம்மன் கோயில் திருவிழாவில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக புகார் எழுந்தது. கோயிலில் ஒரு தரப்பினர் வழிபட மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது.

The post சேலம் தீவட்டிப்பட்டி திருவிழா கலவரம் தொடர்பான வழக்கில் ஜாமின் கோரியவர்கள் மனு இன்று விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Salem Divattipatti festival riots ,Salem ,AIADMK ,Vijayan ,Divattipatti ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...